
ஹைதராபாத்: நீதிமன்றத்துக்கு வெளியே வந்து, குற்றம் சாட்டப்பட்ட வயதான தம்பதியினரிடம் நீதிபதியே நேரில் விசாரணை நடத்தி தீர்ப்பளித்துள்ளார். நீதிபதியின் இந்த மனிதாபிமான செயல் தெலங்கானா மற்றும் ஆந்திராவில் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், ராமகூர் கிராமத்தை சேர்ந்தவர் கங்காராம் (75). இவரது மனைவி சோமம்மாள் (69). இந்த வயதான தம்பதியினர் மீது மருமகள் வரதட்சணை கொடுமை வழக்கு போட்டிருந்தார். இவ்வழக்கு நிஜாமாபாத் மாவட்டம், போதன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சரிவர நடக்க கூட முடியாத இந்த வயதான தம்பதியினர், ஒவ்வொரு வாய்தாவிற்கும் கஷ்டப்பட்டு நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராயினர்.