
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே மீட்கப்பட்ட யானை குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சி பலனிளிக்காத நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது.
கோவை வனக்கோட்டம் சிறுமுகை வனச்சரகத்தில் கடந்த மே 26-ம் தேதி தாயைப் பிரிந்த 10 மாதம் உள்ள ஆண் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் உடல் மெலிந்து காணப்பட்ட குட்டி யானைக்கு குளுக்கோஸ், லேக்டோஜென், தர்பூசணி, புல் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.