• June 13, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளை காவல் துறை விதித்துள்ளது. இவற்றில் முன்கூட்டியே மேற்கொள்ளும் ஏற்பாடுகளை நிறைவேற்றி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்து முன்னணி அமைப்பு சார்பில், முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி மாநாட்டு பந்தல், மேடை அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடக்கின்றன. இந்த மாநாட்டில் பங்கேற்போர், முருகனின் ஆறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை பார்க்கும் விதமாக மாநாட்டு திடலில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த மாநாட்டுக்கான அனுமதி கேட்டு மாநாட்டு பொறுப்பாளர்கள், மதுரை மாநகர காவல் துறையை அணுகினர். லட்சக்கணக்கான பக்தர்கள், மக்கள் கூடும் நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 52 நிபந்தனைகளை விதித்து, அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *