• June 13, 2025
  • NewsEditor
  • 0

தென்காசி: தென்காசி அருகே கீழபாட்டாகுறிச்சியில் உள்ள முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 3 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அந்த இல்லத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் அருகே கீழபாட்டாகுறிச்சியில் அன்னை முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தை ராஜேந்திரன் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு சுமார் 60 பேர் தங்கியிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவு சாப்பிட்ட முதியோர் சிலருக்கு உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக, அவர்களில் 11 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *