
புதுடெல்லி: காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்து வைப்பதாக கூறி பக்தர்களிடம் ரூ.1,000 முதல் ரூ.5,000 பெற்று மோசடி செய்தது தொடர்பாக 21 போலி பண்டிதர்களை உ.பி. போலீஸார் கைது செய்துள்ளனர்.
உ.பி.யின் புனித நகரங்களில் ஒன்றான வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. வாராணசி எம்.பி.யான பிரதமர் மோடியின் முயற்சியால் இக்கோயில் பல ஆயிரம் கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்டு புதிய பொலிவுடன் விளங்குகிறது. இதன் பிறகு இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இவர்கள் நீண்டவரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.