
மாநகராட்சி நிர்வாகத்தில் அதிகம் தலையீடு செய்வதாக ஏற்பட்ட குற்றச்சாட்டில் கட்சியில் இருந்து கணவர் நீக்கப்பட்ட நிலையில், மேயர் இந்திராணி, உள்ளூர் அமைச்சர்கள், மாநகர மாவட்டச் செயலாளர், ஆளும்கட்சி கவுன்சிலர்கள் ஆதரவில்லாமல் தனித்துவிடப்பட்ட நிலையில் உள்ளார்.
மதுரை மாநகராட்சி தேர்தலில் திமுக 67 வார்டுகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. மதுரை மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிபாரிசு அடிப்படையில் 57-வது வார்டு திமுக கவுன்சிலர் இந்திராணி மேயரானார். இதனால் மேயர் பதவியை எதிர்பார்த்த திமுக முக்கிய நிர்வாகிகள் குடும்பத்தைச் சேர்ந்த பெண் கவுன்சிலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.