
பசில் ஜோசப் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மலையாள திரையுலகில் நடிகராகவும், இயக்குநராகவும் முன்னணியில் இருப்பவர் பசில் ஜோசப். இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘மின்னல் முரளி’ திரைப்படம் இந்திய திரையுலகில் பலருடைய கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நாயகர்கள் இவரிடம் கதைகள் கேட்டு வந்தார்கள். அதே வேளையில் மறுபுறம் இவருடைய நடிப்பில் வெளியான படங்களும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.