
அகமதாபாத்: “விமானம் விபத்துக்குள்ளானபோது நானும் இறந்துவிடுவேன் என்றே நினைத்தேன். ஆனால் நான் கண்களைத் திறந்தபோது, நான் உயிருடன் இருந்தேன்.” என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒற்றை நபரான விஷ்வாஸ் குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
விமான விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் விபத்தில் உயிர் தப்பிய விஷ்வாஸ், விமானம் மோதிய இடத்தில் இருந்ததால் காயமடைந்த மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்கள் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.