
அமெரிக்க இராணுவத்தின் 250-வது ஆண்டு விழா ஜூன் 14 சனிக்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பிறந்தநாளுடன் இணைந்து நடைபெறும் எனக் கூறப்படுகிறது. வாஷிங்டனில் ஒரு பெரிய அளவிலான விழா, அணிவகுப்புடன் நடத்தப்படும்.
இந்த நிகழ்வில் சுமார் 6,600 வீரர்கள், 150 இராணுவ வாகனங்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்க பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனிரை அமெரிக்கா அழைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே இந்தியா – பாகிஸ்தான் உறவு குறித்து பல்வேறு கருத்துகளை கூறிவரும் அமெரிக்கா, இந்தியாவின் அனைத்துக் கட்சிகளின் தூதுக்குழு சென்றபோதுகூட, ‘பாகிஸ்தானுடன் உறவு பாராட்டுவோம்’ என்பதை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், “பஹல்காம் தாக்குதலுக்கு சற்று முன்பு ஆத்திரமூட்டும் மொழியில் பேசிய பாகிஸ்தான் ராணுவத் தளபதி இவர்தான். அமெரிக்கா உண்மையில் என்ன செய்யப் போகிறது? இந்தியாவின் ராஜாதந்திர நடவடிக்கைக்கு மற்றொரு பின்னடைவு.
சமீபத்தில், அமெரிக்க ராணுவத் தலைவர் பாகிஸ்தானை ‘பயங்கரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தில் சிறந்த கூட்டாளி’ என்று அழைத்தார். நமது பிரதமரும் அவரது கையாள்களும் இதற்கு என்ன சொல்வார்கள்? இது இந்தியாவிற்கு ஒரு ராஜதந்திர பின்னடைவு இல்லையா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.