
புதுடெல்லி: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று சந்தித்துப் பேசினார். தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போரில் பிரான்ஸ் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி கூறினார்.
வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து புறப்பட்டார். பஹல்காம் தீவிரவாத தாக்குலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரம் கடந்திருந்த சூழலில் அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.