
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் நேரில் ஆஜராக விலக்குகோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜூன் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
கடந்த 2006 – 2011 வரையிலான திமுக ஆட்சிகாலத்தில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தார். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.