
மதுரை: மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று இந்து முண்ணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கூறினார்.
மதுரை பாண்டி கோவில் அருகேயுள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் வரும் 22-ம் தேதி நடத்தப்படும் முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட வேல்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டன.