• June 11, 2025
  • NewsEditor
  • 0

நாமக்கல்: “மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு மூலம் திமுக தலைமையிலான அரசுக்கு முடிவுரை எழுதப்படும்,” என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சரும், தமிழக பாஜக தலைவருமான எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் இன்று (ஜூன் 11) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “திமுக என்றால் ஸ்டிக்கர் ஒட்டுவது தான். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தான் சிங்காரச் சென்னை என கூறுகின்றனர். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் மாநில அரசு செய்தது போல் காண்பிப்பது தான் திமுகவின் வேலை. வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை முருக கடவுள் ஓட ஓட விரட்ட போகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்த பிறகு இண்டியா கூட்டணியில் உள்ள கட்சியினருக்கு பெரிய அளவில் பயம் வந்து விட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *