
புதுடெல்லி: இந்தியாவில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பது உலகின் மிகவும் கடுமையான மற்றும் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற சர்வதேச தேர்தல் ஒருமைப்பாடு மாநாட்டில் சிறப்புரையாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், "இந்தியாவில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பது என்பது உலகின் மிகவும் கடுமையான மற்றும் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்றாகும். இது தேர்தல் செயல்முறையின் துல்லியம் மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துகிறது.