• June 11, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: “தவெக தலைவர் விஜய் ஓர் எடுப்பார் கைப்பிள்ளை என தெளிவாக தெரிகிறது. அவர் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரியையே கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக்கியதால் அவர் தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்” என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

மதுரையில் இன்று மனித நேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியது: “மதுரையில் ஜூலை 6-ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சிறுபான்மை சமூகத்தினருக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். வக்பு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் ஆகிய 2 கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி, மாநாடு நடத்தவுள்ளோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *