• June 11, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பட்டாசு ஆலையில் இன்று (புதன்கிழமை) காலை ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.

காரியாபட்டி அருகே உள்ள வடகரையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *