• June 11, 2025
  • NewsEditor
  • 0

நாகர்கோவில்: குமரியில் கடலையும், கடற்கரையையும் அழிக்கும் திட்டங்களை கைவிடக் கோரி சின்னமுட்டம் பகுதியில் இன்று (ஜூன் 11) மீனவர்கள் கடல் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டம், கடலில் கனிம மணல் எடுக்கும் முயற்சி, கடல் காற்றாலை திட்டம் மற்றும் கப்பல்களின் அதிக போக்குவரத்தால் ஏற்படும் விபத்துகள் போன்றவற்றால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதுடன் கடல் வளத்தை அழிக்கும் போக்கு நிலவுகிறது. எனவே, இந்தத் திட்டங்களை கைவிடக் கோரி கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் துறைமுகத்தில், மீனவர்கள் தங்கள் படகுகளுடன் இன்று குடும்பத்துடன் கடலில் இறங்கி கடல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *