• June 11, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: “பல ஆண்டுகளுக்கு முன்பு, லட்சக்கணக்கான இந்திய குடிமக்கள் 'தீண்டத்தகாதவர்கள்' என்று அழைக்கப்பட்டனர். ஆனால் இன்று, அந்த மக்களைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் நீதித்துறையில் மிக உயர்ந்த பதவியை வகிப்பவராக வெளிப்படையாகப் பேசும் இடத்தில் இருக்கிறோம்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.

இந்தியாவின் மிக உயர்ந்த நீதித் துறைப் பதவியை வகிக்கும் இரண்டாவது பட்டியலினத்தவர் மற்றும் முதல் பவுத்தரான தலைமை நீதிபதி கவாய், ஆக்ஸ்போர்டு யூனியனில் ஆற்றிய உரையில், “பல தசாப்தங்களுக்கு முன்பு, இந்தியாவின் மில்லியன் கணக்கான குடிமக்கள் 'தீண்டத்தகாதவர்கள்' என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் தூய்மையற்றவர்கள் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. அவர்களால் தங்களுக்காகப் பேச முடியாது என்று சொல்லப்பட்டது. ஆனால், இன்று நாம் இங்கே இருக்கிறோம், அந்த மக்களைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் நீதித் துறையில் மிக உயர்ந்த பதவியை வகிப்பவராக வெளிப்படையாகப் பேசும் இடம் இது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இதைத்தான் செய்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *