• June 11, 2025
  • NewsEditor
  • 0

கலபுராகி: “கடந்த 65 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். ஆனால், இவ்வளவு பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் பிரதமரை நான் பார்த்ததில்லை. அவர் எல்லாவற்றுக்கும் பொய் சொல்கிறார். அவர் தனது தவறை ஒப்புக்கொள்வதே இல்லை” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

கர்நாடகாவின் கலபுராகியில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர், "மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகின்றன. இதில், 33 தவறுகள் நடந்துள்ளன. உங்களுக்குத் தெரியும், நான் நாடாளுமன்றத்திலும் இது குறித்துப் பேசி வருகிறேன். இவ்வளவு பொய் சொல்லி, இவ்வளவு தவறுகளைச் செய்து, மக்களை சிக்க வைத்து, இளைஞர்களை ஏமாற்றி, ஏழைகளை சிக்க வைத்து வாக்குகளைப் பெறும் பிரதமரை நான் பார்த்ததில்லை. நான் 65 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். ஆனால், அவரைப் போல யாரும் இருந்ததில்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *