
சென்னை: உலகிலேயே மிகவும் உயரமான காஷ்மீர் செனாப் ரயில்வே மேம்பாலத்தின் உறுதித்தன்மையை கண்காணிக்கும் பணியை சென்னை சிஎஸ்ஐஆர் – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் மேற்கொள்ள உள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று அம்மையத்தின் இயக்குநர் என்.ஆனந்தவல்லி தெரிவித்தார்.
சென்னை தரமணியில் இயங்கி வரும் சிஎஸ்ஐஆர் – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (எஸ்இஆர்சி) இன்று (ஜூன் 10) வைர விழாவை கொண்டாடுகிறது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர் என்.ஆனந்தவல்லி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: