• June 10, 2025
  • NewsEditor
  • 0

சமீபத்திய பேட்டி ஒன்றில் மோகன்லால் தன்னுடைய கோபம் குறித்துப் பகிர்ந்திருக்கிறார். 

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். ‘எம்புரான்’ படத்தைத் தொடர்ந்து ‘துடரும்’ படத்தில்  நடித்திருந்தார். கடந்த மாதம் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

‘துடரும்’ படத்தில்…

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மோகன்லால் தன்னுடையக் கோபம் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.

“மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராகத் திகழ்ந்த நடிகர் பிரேம் நசீரை ஒரு நபர் தொடர்ந்து 2, 3 மணி நேரமாக விமர்சித்து கொண்டே இருந்தார்.

அந்த நபரின் வதந்திகளை முடிந்தவரைச் சகித்துக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் அவர் பேசியதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அவரை அறைந்து விட்டேன். இதுபோன்ற விஷயங்கள் நடக்கும்.

பிரேம் நசீர்
ல்

வேறு வழியில்லாமல் இருக்கும்போதுதான் நீங்கள் ஒருவரை அடிப்பீர்கள், இப்போது கூட, அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால், மீண்டும் அதை நான் செய்வேன்” என்று மோகன்லால் கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *