• June 9, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பயணிகளில் 4 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர். காயமடைந்த 6 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று காலை 9.30 மணி அளவில் ரயில் கசாரா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திவா மற்றும் கோபர் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரயில்கள் எதிரெதிர் திசைகளில் சென்றபோது, இரண்டு ரயில்களிலும் நெரிசல் காரணமாக படிகளில் பயணித்த ​​பயணிகளின் முதுகுப்பைகள் உரசிக் கொண்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *