
புதுச்சேரி: விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் வரப்போகிறது என மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவையை காகிதம் இல்லாத சட்டப்பேரவையாக மாற்றும் வகையில், வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இவிதான் செயலி முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இவிதான் செயலியை மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் இணை அமைச்சர் எல்.முருகன் புதுவையில் இன்று தொடங்கி வைத்து பேசியது: “கடந்த காலங்களில் ஏழைகளை உயர்த்த வேண்டும் என கூறி வந்தார்கள். ஆனால் எந்த வேலையும் செய்யவில்லை.