
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
ஒரு டிசம்பர் மாதம்… புயலின் காரணமாக அலுவலகத்திற்கு விடுமுறை.
யூடியூப் செய்திகளில் மழையின் பாதிப்பைப் பற்றி தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஊர் எங்கும் கடும் வெள்ளம். என் தெருவிலும் தான்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், வீட்டிற்கு வெளியே நின்று மழையை ரசித்துக்கொண்டு இருக்கிறேன்.
அழகான ராட்சசி — ஆம், அப்படித்தான் சொல்ல வேண்டும்; ஏனென்றால் இவ்வளவு அழகாக இருந்தாலும், மொத்த ஊரையும் விழுங்கியிருந்தாள்.
மழை வெள்ளம் வீட்டின் வெளி இரும்பு கதவை பாதியாக விழுங்கி விட்டது.
தரை தளத்தில் வசிப்பதால், மழை நீர் வீட்டுக்குள் வந்து விடுமோ என எண்ணி சிறு அச்சம்.
புயல்காற்று, காகங்களை வேறு திசை நோக்கி விரட்டிக் கொண்டுயிருக்கிறது.
வெளிர் நீல நிற எதிர் மாடி வீடு, மழையினால் அடர் நீல நிறமாக மாறி இருக்கிறது .
பொழுதைப் போக்க கைப்பேசியின் தொடு திரையை முன்னும் பின்னுமாக தள்ளிக் கொண்டிருக்கிறேன்.
அடைமழை சற்று ஓய்ந்திருக்கிறது. எதிர் வீட்டுப் பெண், வண்ணக் குடையுடன் வாசலில் நிற்கிறாள். யாரையோ எதிர்நோக்கி காத்திருக்கிறாள்.
சிறிது நேரத்தில், சிவப்பு நிற ரெயின் கோட் அணிந்த இளைஞன் ஒருவன் மழையை பொருட்படுத்தாமல், கடும் வெள்ளத்திலும் இடுப்பு அளவு நீரில் முழ்கியவாறு கையில் இரு பைகளோடு அங்கு வந்து அவளிடம் உணவு விநியோகம் செய்கிறான்.
பாவம்… அவன் பசியை போக்க, அவளது பசியை போக்கி உழைத்துக் கொண்டு இருக்கிறான்.
அவன் உழைப்பை எண்ணி, மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில்… இந்த மழை வெள்ளத்தில்!
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
-
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
-
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
-
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
-
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 20, 2025
-
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
-
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
-
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
-
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
-
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.