
ராமநாதபுரம்: ராமேசுவரத்துக்கு தரிசனத்திற்காக சென்ற காரும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் ஐடி ஊழியர் மற்றும் சிறுமி ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து ராமேசுவரத்துக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்த சுற்றுலா வேனும், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்து ராமேசுவரம் சென்ற காரும் இன்று அதிகாலை ஒன்றை ஒன்று முந்த முயன்ற போது ராமநாதபுரத்தை அடுத்த நதிப்பாலம் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதிக்கொண்டன.