
பனாஜி: வயதான பெண்ணுக்கு உரிய சிகிச்சை வழங்காத அரசு மருத்துவரை கோவா சுகாதார அமைச்சர் கோபமாக திட்டியதுடன் அவரை உடனடியாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்தும் உத்தரவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானதையடுத்து, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என நேற்று உறுதி அளித்தார்.
கோவா சுகாதார துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே. இவர் கடந்த சனிக்கிழமையன்று கோவா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். அப்போது வயதான பெண் ஒருவருக்கு ஊசிபோட மருத்த புகாரில் தலைமை மருத்துவ அதிகாரி ருத்ரேஷ் குட்டிகரை அழைத்து கடுமையாக எச்சரித்ததுடன் உடனடியாக பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.