
சென்னை: சென்னையில் இருந்து 326 பேருடன் துபாய் புறப்பட இருந்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட் ஏர்லைன்ஸ் 312 பயணிகள் மற்றும் 14 விமான ஊழியர்களுடன் நேற்று காலை 9.50 மணிக்கு புறப்பட இருந்தது. விமானம் ஓடுபாதையில் ஓட தொடங்குவதற்காக, விமானம் நிற்கும் இடத்தில் இருந்து டேக்ஸி வே டி 1 பகுதிக்கு வந்து கொண்டிருந்தது.