
சென்னை: பாஜக ஆளும் மாநிலங்களின் எம்பிக்கள் எண்ணிக்கையை அதிகரித்து, தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்க மத்திய பாஜக அரசு சதி செய்வதாக, தென்சென்னை எம்பி., தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாஜக அரசு மக்களாட்சி என்ற மகத்தான அரணை புல்டோசர்களைக் கொண்டு இடித்து தள்ளி நாசம் செய்யும் செயல்களைத் தொடர்ந்து செய்து வருகிறது.