
சென்னை: சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு ஜூன் 4-ம் தேதி ஜூன் 8-ம் தேதி அதிகாலை வரை 11,026 பேருந்துகளில் 6 லட்சத்து 6 ஆயிரத்து 430 பேர் பயணம் செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கடந்த 4-ம் தேதி இரவுக்கு மேல் இல்லாததால், 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், சாலையில் இருபுறமும் 3 கி.மீ. வரை வாகனங்கள் அணி வகுத்து நின்றன. மேலும், போக்குவரத்து துறை மீது பயணிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.