• June 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: உணவுத்துறை அமைச்சர் தலைமையிலான மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலை சீரமைத்து 23 உறுப்பினர்களுடனான புதிய பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசிதழில் உணவுத்துறை செயலர் சத்யபிரத சாஹூ வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: உணவுத்துறை அமைச்சர் தலைமையிலான இந்த கவுன்சிலில், வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த், தஞ்சாவூர் எம்.பி., எஸ்.முரசொலி, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவா, உணவுப் பொருள் வழங்கல் ஆணையர், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய பதிவாளர், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக தலைவர், இந்தியன் ஆயில் நிறுவன மாநில ஒருங்கிணைப்பாளர், மாநில அளவிலான வங்கியாளர் குழுவின் உதவி பொதுமேலாளர், பிஐஎஸ் தென் மண்டல துணை இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *