
புதுடெல்லி: எரிந்த நிலையில் பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா விரைவில் ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் யஷ்வந்த் வர்மா நீதிபதியாக பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் 14-ம் தேதி அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். அப்போது நீதிபதியின் வீட்டில் ஓர் அறையில் எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் கண்கெடுக்கப்பட்டது.