
ஆக்ரா: உ.பி. கோயிலில் குரங்கு தூக்கி சென்ற பெண் பக்தரின் கைப்பையை, 8 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு போலீஸார் கண்டுபிடித்தனர். உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ளது பிருந்தாவன் பங்கி பிஹாரி கோயில். பிருந்தாவன் நகரில் அமைந்துள்ள இக்கோயிலில் ராதாகிருஷ்ணர் மூலவராக இருக்கிறார்.
இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அலிகரை சேர்ந்த அபிஷேக் அகர்வால் என்பவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கடந்த வியாழக்கிழமை பங்கி பிஹாரி கோயிலுக்கு வந்தார். சுவாமி தரிசனம் முடித்துவிட்டு அனைவரும் கோயிலில் இருந்து வெளியில் வந்தனர்.