• June 9, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: ​பாஜக மாநில நிர்​வாகி​கள் கூட்​டத்​தில் பங்​கேற்க வந்த மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்​ஷா, மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​தார். மதுரை ஒத்​தக்​கடை​யில் நேற்று நடை​பெற்ற பாஜக மாநில நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா நேற்று முன்​தினம் இரவு டெல்​லியி​லிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலை​யத்​துக்கு வந்​தார். பின்​னர், சிந்​தாமணி​யில் உள்ள தனி​யார் ஹோட்​டலில் தங்​கி​னார்.

இந்​நிலை​யில், நேற்று காலை 11.52 மணிக்கு மதுரை மீனாட்சி அம்​மன் கோயிலுக்கு வந்​தார். கிழக்கு கோபுர வாசல் அருகே கோயிலுக்​குள் சென்ற அமித்​ஷாவை கோயில் நிர்​வாகம் சார்​பில் அறங்​காவலர் குழுத் தலை​வர் ருக்​மணி பழனிவேல்​ராஜன், இணை ஆணை​யர் கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்​றனர். சிவாச்​சா​ரி​யார்​கள் பூரண கும்ப மரி​யாதை அளித்​தனர்.

பின்​னர் கோயிலுக்​குள் சென்ற மத்​திய அமைச்​சர், அம்​மன் சந்​நி​தி, சுவாமி சந்​நி​தி, முக்​குறுணி விநாயகர், விபூதி விநாயகரை தரிசனம் செய்​தார். உச்​சி​கால பூஜை​யில் பங்​கேற்ற பிறகு 12.22 மணி​யள​வில் கோயி​லில் இருந்து வெளியே வந்​து, அங்​கிருந்த பொது​மக்​களை பார்த்து கையசைத்து மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​தி​னார். அவருடன் பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் ஆகியோ​ரும் வந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *