
ஈரோடு: கன்னட மொழி குறித்த பேச்சு தொடர்பாக மன்னிப்பு கேட்க மறுத்ததன் மூலம் கமல்ஹாசன் தமிழனாக தலை நிமிர்ந்து நிற்கிறார், என செல்வபெருந்தகை தெரிவித்தார்.
ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை கலந்து கொண்டார். தொடர்ந்து பா.ஜ.க எம்.எல்.ஏ சி.சரஸ்வதியின் வீட்டுக்குச் சென்று, அவரது மகள் கருணாம்பிகா குமாரின் மறைவுக்கு செல்வபெருந்தகை ஆறுதல் தெரிவித்தார்.