
தருமபுரி: தருமபுரியில் தேமுதிக நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் பணி மேற்கொள்கிறோம்.
இதற்காக விரைவில் மாநில, மாவட்டச் செயலாளர்களுக்கான கூட்டம் நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 9-ம் தேதி கடலூரில் மாநாடு நடத்த உள்ளோம். தொடர்ந்து எங்கள் பயணம் தொடரும். பாஜகவில் இருந்து, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை‌.