
சென்னை: சென்னையில் தங்கியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி நேற்றும் சந்தித்துப் பேசினார். யாருடன் கூட்டணி என்பது 2 அல்லது 3 மாதங்களில் தெரியவரும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த பின்னணியில் சில தினங்களுக்கு முன்பு தைலாபுரத்தில் ராமதாஸை அன்புமணியும் ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் சந்தித்து பேசினர்.