
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். வயதான கணேசன் மதுவுக்கு அடிமையான நிலையில் அடிக்கடி குடும்ப உறுப்பினர்களுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவுவும் வழக்கம்போல் குடித்துவிட்டு மதுபோதையில் மொட்டை மாடிக்கு தூங்குவதற்குச் சென்றுள்ளார். காலை வெகு நேரமாகியும் அவர் எழுந்து கீழே வராததால் சந்தேகமடைந்த அவர் மகன் மோகன்தாஸ் மொட்டைமாடிக்குச் சென்றபோது அங்கு கணேசன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் மகன் மோகன்ராஜ், அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்கவே அக்கம் பக்கத்தினர் காரையூர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மர்மமான முறையில் இறந்த கணேசன் உடலை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்தனர். அதோடு, சந்தேக மரணம் அடிப்படையில் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடிக்கு துங்கச்சென்றவர் காலையில் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.