
சென்னை – புதுடெல்லி இடையே இயக்கப்படும் கிராண்ட் டிரங்க் ( ஜி.டி.,) விரைவு ரயில் நாளை முதல் மீண்டும் சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை ரயில் கோட்டத்தில், பல்வேறு இடங்களில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் ரயில் பாதை பராமரிப்பு, மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் – புதுடெல்லி இடையே இயக்கப்பட்டு வந்த கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் எனப்படும் ஜி.டி. விரைவு ரயில் (12615), கடந்த ஆண்டு மே மாதம் 9-ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டன.