• June 8, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கடந்த புதன்கிழமை அன்று பெங்களூருவில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பை வெற்றி கொண்டாட்ட விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த நிகழ்வுக்கு முன்கூட்டியே ஆள் பற்றாக்குறை, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறைபாடு போன்றவற்றை சுட்டிக்காட்டி காவல் துறை அதிகாரி ஒருவர் தரப்பில் கர்நாடக அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கடிதம் சம்பவம் நடந்த ஜூன் 4-ம் தேதி அன்று எழுதப்பட்டதாக தகவல். நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் ஜி. சத்தியவதி மற்றும் பிற உயர் அதிகாரிகளுக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல். சட்டமன்ற பாதுகாப்பு பணியை கவனிக்கும் காவல் துறை துணை ஆணையர் எம்.என்.கரிபசவன கவுடா அனுப்பிய அந்த கடிதத்தில் ஆட் பற்றாக்குறை மற்றும் கிரவுட் மேனேஜ்மென்ட் குறித்து குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *