
ஆந்திராவை சேர்ந்த பெண் இன்ஜினீயர் மாதவி லதா, தனது 17 ஆண்டு கால வாழ்க்கையை அர்ப்பணித்து உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை வடிவமைத்து, பிரம்மாண்டமாக கட்டி எழுப்பி உள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தால் பக்கால்- கவுரி பகுதிகளுக்கு இடையே செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் திறந்துவைத்தார். இது, உலகின் மிக உயரமான ரயில் பாலம் ஆகும். பூகம்பம், வெடிகுண்டு தாக்குதலை சமாளிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், இன்ஜினீயரிங் அதிசயம் என்று போற்றப்படுகிறது. செனாப் பாலம் உருவான பின்னணி கதை தற்போது வெளியாகி இருக்கிறது.