
மகாராஷ்டிரா தேர்தல் முடிவு குறித்த ராகுல் காந்தியின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றன. இது வரும் பிஹார் தேர்தலிலும் நடக்கும்” என குற்றம்சாட்டி உள்ளார்.