
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் தொடர் என்கவுன்டர் சம்பவங்களில் இரு முக்கிய தலைவர்கள் உட்பட 7 நக்சலைட்கள் கொல்லப்பட்டதாக போலீஸார் நேற்று தெரிவித்தனர்.
சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசியப் பூங்காவின் அடந்த வனப் பகுதிக்குள் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: கடந்த 3 நாட்களில் நடைபெற்ற தொடர் என்கவுன்ட்டர் சம்பவங்களில் 2 பெண்கள் உட்பட 7 நக்சலைட்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் நரசிம்மாசலம் என்கிற சுதாகர், பாஸ்கர் என்கிற மைலரபு அடெல்லு ஆகியோர் முக்கிய தலைவர்கள் ஆவர்.