
தேமுதிக மண்டல மற்றும் தொகுதிவாரியான பொறுப்பாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் ஜூன் 11 முதல் 14-ம் தேதி வரை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், கூட்டணி, பூத் கமிட்டிகள் அமைப்பு என தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. அந்தவகையில், தேமுதிகவும், கட்சிரீதியான கட்டமைப்பு வலுப்படுத்தி வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாகவும், மண்டலம் வாரியாகவும் புதிய பொறுப்பாளர்களை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்துள்ளார்.