
உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் புனித தளத்துக்குச் சென்ற தனியார் ஹெலிகாப்டர் ஒன்றில், திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விமானி சிக்கலான சாலையில் ஆபத்தான முறையில் தரையிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கூறுவதன்படி, கேஸ்ட்ரல் ஏவியேஷனின் AW119 என்ற ஹெலிகாப்டர், மதியம் 12:52 மணிக்கு படாசு ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறால் ருத்ரபியாக் மாவட்டம், குப்த்காஷி பகுதியில் உள்ள பிரதான சாலையில் தரையிறக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரில் இருந்த ஐந்து பயணிகளும் உயிர் தப்பினர். எனினும் விமானி கேப்டன் ஆர்.பி.எஸ். சோதிக்கு முதுகு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஹெலிபாடில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஹெலிகாப்டரின் கட்டுப்படுத்துவதில் சிக்கல் இருந்ததை விமானி கவனித்துள்ளார். அதற்குத் தகுந்தவாறு, ஹெலிபேடை ஒட்டிய சாலையிலேயே தரையிறக்க முடிவு செய்துள்ளார்.
VIDEO | Uttarakhand: A private helicopter made an emergency landing on a road in Rudraprayag. The helicopter’s tail section fell onto a car. All passengers of the helicopter are safe. The pilot sustained minor injuries. Further details are awaited.
(Source: Third Party)
(Full… pic.twitter.com/4tHLwktald
— Press Trust of India (@PTI_News) June 7, 2025
சில நாட்களுக்கு முன்னர் உத்தரகண்ட் மாநிலத்தின் கங்கானி பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து நடந்து 6 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வுக்குப் பிறகு கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர்கள் செல்வது நிறுத்தப்பட்டிருந்தது.
மீண்டும் ஹெலிகாப்டர் சேவை தொடங்கிய சில நாட்களிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.