
திருப்பூர்: தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் புழக்கம் சமூகத்தில் அதிகரித்துள்ளது. எவ்வித கட்டுப்பாட்டையும் ஏற்படுத்த காவல்துறையால் முடியவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன், பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருப்பூர் வந்த நிலையில் இன்று (ஜூன் 7) செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா மதுரை வருவது கட்சியினருக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுப்பது மட்டுமல்ல அதிமுக உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகளுக்கு பலம் சேர்க்கும்.