
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் இன்று (ஜூன்.7) கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பள்ளிவாசல்களில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, லால்பேட்டை, ஆயங்குடி, நெய்வேலி, மந்தாரக்குப்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது.