
புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 5,862 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் அங்கு முகக்கவசம் அணிவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க போதிய நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.