
சென்னை: தமிழகத்தில் சிறப்பு சுயஉதவிக் குழுக்களுக்கு வாழ்வாதார நிதியாக ரூ.3.45 கோடியை தமிழக அரசு விடுவித்துள்ளது.
இதுகுறித்து மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பழங்குடியினர், நலிவுற்றோர், திருநங்கையரைக் கொண்ட 23 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.23 லட்சம், 227 முதியோர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2.27 கோடி மற்றும் 95 மாற்றுத் திறனாளிகள் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.95 லட்சம் என மொத்தம் 345 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு வாழ்வாதார நிதியாக ரூ.3.45 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.