
சென்னை: சுற்றுச்சூழல் ஒப்புதல் இல்லாமல் ஓராண்டு வெட்டியெடுத்த கற்களின் மதிப்பில் நூறு சதவீத தொகையை இழப்பீடாக செலுத்தும்படி, குவாரி உரிமதாரர்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கல்குவாரி உரிமதாரர்கள், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. சுற்றுசூழல் ஒப்புதல் பெறாமல் 2016 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான ஓராண்டு காலத்தில் வெட்டி எடுத்த கற்களின் மதிப்பில் நூறு சதவீத தொகையை இழப்பீடாக செலுத்தும்படி, குவாரி உரிமதாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.