
லக்னோ: கொல்லப்பட்டதாக கருதப்பட்ட நபர் உயிருடன் திரும்பியதால் கொலை வழக்கில் கைதானவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2022 டிசம்பரில் டெல்லி – அயோத்தி ரயிலின் டி2 பொதுப் பெட்டியில் ஏற்பட்ட தகராறில் பிஹாரை சேர்ந்த எடாப் என்பவர் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டார். அப்போது தண்டவாளத்துக்கு அருகில் கிடந்த ஒரு உடலை எடாப் என்று அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டினர். இதனால் அவரை ரயிலில் இருந்து தள்ளிய உ.பி.யின் அயோத்தி மாவட்டத்தை சேர்ந்த நரேந்திர துபேவை போலீஸார் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.